முல்லை

 முல்லை - முல்லை பெயர்மூலம்:


முல் -> முன் -> முனை

முனை =

கூர்மை, கடலிற்குள்நீண்டுசெல்லும் கூரிய நிலப் பகுதி.


முல் -> முள்

முள் = 

1. கூர்மை. "முள்வாய்ச்சங்கம்" (சிலப். 4:78). 

2. கூரிய நிலைத்திணையுறுப்பு. "இளைதாக முண்மரங் கொல்க" (குறள். 879).

3. ஊசி. 

4. பலாக்காய் முனை.


முள் -> முளை 

முளை  = கூரிய முனை. "முள்ளுறழ்முளையெயிற்று" (கலித்.4)


முல் -> முல்லை

முல்லை = 

கூரிய அரும்புவகை, அஃதுள்ளகொடி, அக் கொடி வளரும் காடு, காடும் காடு சார்ந்தஇடமும். 

"முல்லை வைந்நுனை தோன்றவில்லமொடு" (அகம். 4:1).

என்பதில், முல்லையரும்பை வைந்நுனை என்று அதன் கூர்மையைச் சிறப்பித்திருத்தல்காண்க. 

வை = கூர்மை.


~ பாவாணர் (ஐந்திணை பெயர்மூலம்: தமிழர் வரலாறு 1: பக். 100)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருகன் - தமிழ்ப்பெயர்கள்

செவ்வாய் (The Planet Mars) - தமிழ்ச்சொற்கள்

ஊர் பெயர்கள்