மக்கள் மலை (குறிஞ்சி), காடு (முல்லை), நாடு (மருதம்), பாலை, கடற்கரை (நெய்தல்) என்னும் ஐந்திடங்களில் வேறு வேறு வாழ்ந்து வந்த பண்டைக்காலத்தில், குறிஞ்சி நிலத்து ஊர்கள் குறிச்சி, சிறுகுடி என்றும், முல்லை நிலத்து ஊர்கள் பாடி, சேரி என்றும், மருத நிலத்து ஊர்கள் ஊர் என்றும், பாலை நிலத்து ஊர்கள் பறந்தலை என்றும், நெய்தல் நிலத்து ஊர்கள் பாக்கம், பட்டினம் என்றும் ஈறுகொடுத்துக் கூறப்பட்டன. மக்கள் பல்கித் திணைமயக்கம் உண்டானபின், இவ் வழக்கம் பெரும்பாலும் நின்றுவிட்டது. இடைக்காலத்தில் வழங்கிய சில ஊர்ப்பெயர்களும் ஊர்ப் பெயரீறுகளும் வெவ்வேறு காரணம் பற்றியவை. ஆறை என்பது ஆற்றூர். புத்தூர் என்பது புதியவூர்; மூதூர் என்பது பழையவூர்; பேரூர் என்பது மாநகர்; பட்டி என்பது கால்நடைத் தொழுவமுள்ள சிற்றூர்; பற்று என்பது தனிப்பட்டவர்க்கு அல்லது ஒரு சாரார்க்கு உரிய சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; அடங்காப்பற்று என்பது அரசனாணைக் கடங்காதவர் வசிக்கும் ஊர்; பள்ளி என்பது பௌத்த சமண மடமுள்ள ஊர்; பாளையம் என்பது படையிருக்கும் ஊர்; பட்டு என்பது பாளையத் தலைவரான சிற்றரசர்க்கு விடப்பட்ட சிற்றூர் அல்லது சிற்றூர்த் தொகுதி; மங்கலம்
கருத்துகள்
கருத்துரையிடுக